இறையருளால் தொடங்கி ஆறு மாதங்களுக்குள் இள மொட்டாக நம் “குலசை’வலைப் பூ” உங்களின் திருக் கரங்களில் தவழ்ந்து வருகிறது 2000 க்கும் மேற்பட்ட பதிவுகளுடனும், 70,000 க்கு மேற்பட்ட வாசகப் பார்வைகளுடனும்.

அனைத்து விதமான கதம்ப பதிவுகள் கொட்டிக் கிடக்கும் சுரங்கமிது.

இவ் வலைப் பூ மென் மேலும் வளர உங்களின் மேலான ஆதரவை அன்புடன் வேண்டுகிறேன்.

குலசை வலைப் பூ பெற்று வரும் பெருமைகள் அனைத்தையும்,

  • மண் மீது வந்தவுடன்….தன்னோடு  எனை அணைத்து
  • என்னோடு பல கதைகள் பேசி…கண்ணுக்குள் கற்பனை தந்து..
  • நெஞ்சிற்குள் கவிதை விதை தூவி..என்னை ஒரு மனிதனாக்கி(?)
  • உலகின் முன் கொண்டு வந்த எங்கள்..பூமி
  • குலசைக்கு மலர்களாக …சமர்ப்பிக்கிறேன்.

Fotor0913151640

அந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே

101

சென்ற வருடம் இதே நாளில் வெளிவந்த என் பதிவு ஒன்று முக நூலில் வாட்ஸ் அப்பில், மற்றும் இணைய
தளங்களில் ஒருவித தாக்கத்தை, அதிிர்வலையை உண்டு பண்ணியது என்பது உண்மை தான்.
பல நண்பர்கள், முகம் அறியா சகோதர, சகோதரிகள், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய வழி காட்டு
மையங்கள், Human Rights Organaisation, என 2000 க்கும் மேற்பட்டவர்கள் இதை பகிர்ந்துள்ளார்கள். இந்த
வருடமும் முதல் ரமலானிலிருந்து பலரும் மீள் பதிவாக இதை பகிர்ந்து வருகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியை கண்கள் கலங்க சமர்ப்பிக்கிறேன்…

Continue reading

பஞ்ச ரோடு

216

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு இன்னொரு பெயர் இருக்கு உங்களில் யாருக்காவது தெரியுமா … ???
—————
… பஞ்ச ரோடு ….. என்று சொல்லுவார்கள் …!!!
————–
பஞ்ச ரோடு –என பெயர் வர காரணம் என்ன தெரியுமா .?
————-

Continue reading

தேன்..தேன்..இனிக்கும் தேன்

215

சிறுவயதில் தேன் இருக்கும் பாத்திரத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து ருசித்தவர்கள் கூட, வளர்ந்த பிறகு தேனை மறந்து விடுகிறார்கள். அது ஏதோ மருந்துப் பொருள் என்றே பலரும் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், தேன் ஒரு மகத்தான உணவு என்பது இக்கட்டுரையின் மூலம் முழுமையாய் விளங்குகிறது. என்னென்ன அற்புதங்கள் மறைந்துள்ளன இந்த தேனில்… தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்…

Continue reading

இறைவனிடம் நாம் பிராத்திப்போம்.

இறைவனிடம் நாம் பிராத்திப்போம்.

யா அல்லாஹ்!

சிறந்த வேண்டுகோளையும்

சிறந்த பிரார்த்தனையையும்

சிறந்த வெற்றியையும்

சிறந்த அமலையும்

சிறந்த நன்மையையும்

சிறந்த உயிர்வாழ்வையும்

சிறந்த மரணத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

(யா அல்லாஹ்!)

Continue reading

தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா ??

215

தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்!!!
உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும். Continue reading

இருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து

இந்த நோன்பு காலத்தில் எனது தயாரிப்பான இருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்தை உபயோகித்துப் பாருங்களேன்..
அஜீரணக் கோளாறு
வாயுத் தொல்லை
கொலஸ்ட்ரால்
இவைகளை அதி விரைவில் தீர்க்கிறது..
உபயோகித்து வரும் அனைவரின் ஏகோபித்த கருத்து..
இதய நோய் உள்ளவர்கள் நோன்பிலும் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்..

214

ஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்!

ஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

#ஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்!
என்னுடன் இணைந்து வாழும் என் ஏழை சகோதர சகோதரிகளுக்காகவும், இதயம் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகளுக்காகவும், அவர்களில் ஒருவனாக உரிமையோடு உதவி கேட்டு உங்களிடம் வருகிறேன்..
எனது இருதய அடைப்பு நீக்கும் அருமருந்து தயாரிப்பு மூலம் கிடைக்கும் சொற்ப லாபமும், எனது உழைப்பிற்கான ஊதியத்தையும் இதயம் அறக்கட்டளை ஏழை குழந்தைகளின் தினசரி உணவுத் தேவைகளுக்காக தருவதாக வாக்களித்து அதன்படி இரு தவணைகளாக கொடுத்து விட்டேன் என்பதையும் ஒரு தகவலாக தருகிறேன்.

இருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து

இருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து

#இதய_நோயாளிகளுக்கு
ஓர் வரப் பிரசாதம்..
இனி பை பாஸ் சர்ஜரி (by pass surgery) தேவையில்லை..

இருதய இரத்தக் குழாய் அடைப்பை
நீக்கும் அற்புத அருமருந்து..

எனது தயாரிப்பில்..
இதோ உங்கள் கைகளில்..
இரத்தக் குழாய் அடைப்பை முற்றிலும் சரி செய்வது மட்டுமின்றி, உடல் பருமனை குறைக்கிறது..


கொலஸ்ட்ராலை கனிசமாக குறைக்கிறது..
மூட்டு வலி, மற்றும் அஜீரணக் கோளாறுகளை நீக்குகிறது..
பொதுவாக இருதய நோயாளிகள் மட்டுமின்றி அனைவருமே உபயோகிக்க கூடிய மா மருந்து..
பக்க விளைவுகள் கிடையாது.
100% சித்த, இயற்கை உணவு மருந்தே.
ஒரு மாத மருந்து 500ml பாட்டில் விலை ரூ 450 மட்டுமே…

இந்த மருந்து பற்றிய விபரங்கள் இடம் பெறாத இணைய தளங்களே இல்லையென கூறும் அளவுக்கு ஆயிரக்கணக்கான இணைய தளங்களில் இது இடம் பெற்றிருக்கிறது..
இந்த மருந்தினை முதன்முதலில் இணையத்தில் அறிமுகப் படுத்தியதே அடியேன் தான்..
இதை கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஆய்வுக்குட்படுத்தி, நான், என் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலருக்கும் கொடுத்து சோதனை செய்ததில், அல்ஹம்துலில்லாஹ், அனைவருக்குமே நல்ல பலன் கிடைக்க தொடங்கியது..
நான் ஒரு அதி தீவிர இதய நோயாளி.. 25 வருடங்களுக்கு முன் ஒருமுறை bypass surgery செய்து இப்போது அனைத்து குழாய்களும் சுருங்கி, வேலை செய்யாத நிலை..Dr.செரியனும், இனி அறுவை சிகிட்சை எதுவும் செய்ய முடியாது, மீதி காலத்தை உயிர் காக்கும் மருந்துகள் மூலம் ஓட்டி கொள்ளவும் என்று கை விரித்த நிலையில், இன்று உயிர் காக்கும் மருந்தாக இந்த மருந்து கை கொடுத்து என் நோயின் தீவிரத்தை குறைத்திருக்கிறது .
எனக்கே இந்த அளவுக்கு குணம் கிடைத்திருக்கிறது என்றால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் மற்றவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நூறு சதவீதம் வந்து விட்டது..
அதன் பிறகே, இதை மற்றவர்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதை தயாரிக்க தொடங்கியுள்ளேன்..

இது விளம்பரமல்ல..
இதில் வியாபார நோக்கமுமில்லை.
பொருட்கள் தரம் மிகுந்தவை.
Apple cider vinegar imported from USA. மூன்று மடங்கு விலை..
பொருட்களின் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்திருக்கிறேன்.
ஒரு மாத மருந்து 500ml பாட்டில் ரூ.450 மட்டும்..கூரியர் கட்டணம் தனி..
இதில் தற்போது கிடைக்கும் சொற்ப லாபமும், இதயம் டிரஸ்ட் எனும் ஏழை குழந்தைகளின் நலன் காக்கும் அமைப்புக்கு தருவதாக உறுதியளித்திருக்கிறேன்.
இறைவன் நாட்டப்படி..

தயாரிக்க தொடங்கி கடந்த பத்து நாட்களில் நூற்றுக்கணக்கான வெளி நாட்டு, வெளி மாவட்ட நண்பர்கள் அலைபேசியில் ஆர்டர்கள் கொடுத்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள உறவினர்கள் மூலமும் பலர் வாங்கி செல்கிறார்கள்..
ராமநாதபுரம், சேலம், கோவைக்கு நம் முகநூல் நண்பர்களே dealership கேட்டிருக்கிறார்கள்.
இப்போது தமிழ்நாடு, பெங்களூரு, மும்பை யில் உள்ளோர் நூற்றுக்கணக்கானவர்கள் கூரியர் மூலம் பெற்று வருகிறார்கள்..
இத்துடன் வங்கி கணக்கு எண்ணும் தருகிறேன்..
தேவையுள்ளோர் என்னை அலைபேசியில்
தொடர்பு கொள்ளவும்..91 9962060353
குறைந்த காலத்தில் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை தந்த இறைவனுக்கு நன்றி..
அதற்கு காரணமாக இருக்கும் என் அன்பு முகநூல் சொந்தங்களுக்கும் நன்றி…நன்றி!
தயவு செய்து படிக்கும் ஒவ்வொருவரும் இதை ஷேர் செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன்..

அலைபேசி எண்: 9962060353
வங்கி விபரம்:

H.MEHAR SULTAN
A/C No:414362020
IFS Code: IDIB000A090
INDIAN BANK
ADHITHANAR SAALAI BRANCH,
CHENNAI-2

Address:)
51,(new 40)narayana naicken street
Opp to mosque
Near market
Pudupet
Chennai 600 002.

Continue reading

அற்புதங்கள் செய்யும் அத்தி!

அற்புதங்கள் செய்யும் அத்தி!

athiஉணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாக பயிரிடப்படுபவை அத்தியும், பேயத்தியும், ஆகும். சீமை அத்தி (பல்கு) மத்தியதரைக்கடல் நாடுகளில் அதிகமாக விளைகிறது. இவைகளை விசேஷ முறைப்படி இறக்கியோ அல்லது தானாக பழுத்து உதிரும் வரை காத்திருந்து, சேமித்தோ பதம் செகின்றனர். Continue reading

ஏரிக்குள் கல்யாண மண்டபம்…

p36

‘பட்டா நிலம்’ என்கிறது அ.தி.மு.க…
வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட பெருவெள்ளம் வடிந்துவிட்டது. அந்தத் தாக்குதலின் சோகத்திலிருந்தும் பலர் மீண்டுவிட்டனர். ஆனால், இந்தச் சோகத்துக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன. Continue reading

2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்!  

2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்!

 
முக மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை என்று இன்று மருத்துவம் எட்டாத சிகரத்தை எட்டிவிட்டது என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த மருத்துவம் சில நூறு ஆண்டுகளுக்கு முன், எப்படி இருந்திருக்கும். இவ்வளவு நவீன வசதிகள் இல்லாத காலத்தில் முறையான மருத்துவக் கல்வியை பெற்றிறாத மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
பாவம்.. அறுவை சிகிச்சை வசதியில்லாத அந்தக் காலத்தில் நோயாளிகள் இறந்துதான் போயிருப்பார்கள் என்பதுதான் நம்மில் பலரின் நினைப்பாக இருக்கும். ஆனால், அதில் சற்றும் உண்மை இல்லை. கி.மு. 715 ஆம் ஆண்டு. ரோமப் பேரரசின் முக்கியமான நாள் அது. அந்நாட்டு இளவரசி பிரசவ வேதனையால் துடித்தாள். வழக்கமாய் குழந்தை பிறப்பதை விட இளவரசிக்கு விளங்காத ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாகவே அரண்மனை வைத்தியர் உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியவில்லை அவருக்கு. மன்னரின் அதிகாரம் ஒரு பக்கம். வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தையை எடுக்க வேண்டுமோ என்ற தடுமாற்றம் வைத்தியருக்கு. இளவரசிக்கு இதில் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம். வேறு வழியின்றி வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தை எடுக்கப்பட்டது. அந்த குழந்தைதான் ஜூலியஸ் சீசர். இந்தத் தகவல்கள் எல்லாம் அரண்மனையின் அறிக்கை ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு விஷயம் தெரியுமா? நாம் பயன்படுத்தும் சிசரியன் என்ற வார்த்தை கூட சீசர் பிறந்த பிறகுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாம்.
கி.மு.320ஆம் ஆண்டு இந்தியாவில் மௌரியப் பேரரசு ஆண்டு வந்த காலம். சந்திரகுப்த மௌரியரின் மனைவிக்கு பிரசவ வலியால் துடித்தபோது, இயற்கையாக குழந்தை பிறக்கவில்லை. அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் மௌரியப் பேரரசின் மிக முக்கிய அரசரான பிந்துசாரர். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த சிகிச்சையில் அவரது தாயார் இறந்துபோனார்.
அதேபோல இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சிசரியன் மூலமே குழந்தை பெற்றுள்ளார்கள். அந்த பிரசவத்தின் போது எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.
அதேபோல 1998 ஆம் ஆண்டு திபெத் நாட்டின் கிங்காய் பகுதி அது. அகழ்வாராய்ச்சி ஆராய்ச்சியாளர்கள், அக்காலத்து மனித நாகரிகத்தை தெரிந்துகொள்வதற்கான தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆராய்ச்சியாளர்கள் ஒரு பகுதியை தோண்டும்போது நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள். ஆராய்ச்சியாளர்களின் முகத்தில் ஏக மகிழ்ச்சி. ஏனெனில் அந்த மண்டை ஓடுகளின் வயதை கணக்கிடும்போது, அந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தது. மனித நாகரிகத்தின் அரிச்சுவடியை நாம் இனி எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு சொல்ல முடியாத உற்சாகம். ஆனால், கிடைத்த மண்டை ஓடுகளில் சில மற்றும் மற்ற மண்டை ஓடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மண்டை ஓடு விரிந்து பிளக்கப்பட்டு இருந்தது. ஒரு வேளை யாராவது இவர்களை படுகொலை செய்திருக்கலாமோ? என்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம். சோதனைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன மண்டை ஓடுகள். சோதனையின் முடிவில் ஆராய்ச்சியாளர்களுக்கு பெருத்த ஆச்சர்யம். ஏனெனில் தலையில் அறுவை சிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைத்தது. மற்றொருவரின் மூளையை இன்னொருவருக்கு பயன்படுத்தியிருந்ததும், தலையில் ஏற்படும் ஏதோ சில பிரச்சினைகளுக்க அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.
திபெத்தில் சொகைல் என்ற இந்தியர் திபெத்தில் வசித்து வந்தார். இவர் ஒரு மருத்துவர். இவருடைய திபெத்திய நண்பர் ஒருவருக்கு தீராத தலைவலி. என்னென்னமோ சிகிச்சைப் பெற்றிருக்கிறார். ஆனால், எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை தலைவலி. சொகைல் தனது நண்பரிடம் தலையில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாய்ப்போகும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நண்பருக்கோ பயம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போது உயிருக்கு ஏதும் ஆபத்தும் நேரிடக்கூடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஒருபுறம் சொகைல் மீதுள்ள நம்பிக்கை. மற்றொருபுறம் உயிர்மீதுள்ள பயம். அறுவை சிகிச்சை செய்யலாமா? வேண்டாமா? என்று பெரும் மனப் போராட்டத்திற்கு இடையில் தலைவலி இன்னும் அதிகரிக்கவே, உயிரைப் பற்றி கவலைப்படாது, அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார் திபெத் நண்பர். சொகைல், திபெத் மருத்துவ நண்பர்களின் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அதற்குப் பிறகு அந்த நண்பருக்கு தலைவலி ஏதும் வரவில்லை. இந்த மாபெரும் அறுவை சிகிச்சை நடந்தது எப்போது தெரியுமா? கிட்டத்தட்ட 2900 ஆண்டுகளுக்கு முன்.
அதுமட்டுமல்லாமல், இந்த அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட கத்தி போன்ற ஆயுதங்கள் அனைத்தையும், சொகைல் ஸ்டெர்லைஸ் செய்துதான் பயன்படுத்தியிருக்கிறார். ஏனெனில் அவருடைய மருத்துவக் குறிப்பு ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு ஸ்டெர்லைஸ் செய்வதன் முக்கியத்துவம் குறித்து மிக விரிவாக கூறியிருக்கிறார். அத்துடன் அதன் அவசியம் மிக முக்கியமானது என்றும் விளக்கியிருக்கிறார்.
திபெத் பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் கர்மா த்ரிமோலி. இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில்தான் இத்தகைய அபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திபெத்தியர்களின் அறுவை சிகிச்சை மிகவும் விசித்திரமானதும் நுட்பமானதும் ஆகும் என்று தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் அறுவை சிகிச்சை நுணுக்கங்கள் அனைத்தும் மிகப் பழமையான திரிபித்தகா என்ற தகவல் களஞ்சியத்தில் (என்சைக்ளோபீடியாவில்) விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் கர்மா த்ரிமோலி குறிப்பிட்டுள்ளார்.
பண்டைய கால மனிதர்கள் நாகரிகம் அறியாதவர்கள், விஞ்ஞானம் கற்றறியாதவர்கள் என்ற ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் அனைத்தும் திபெத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி பொய்க்க வைத்தது. அப்படியானால், பண்டைய கால மனிதர்கள் நம்மைவிட நாகரிகத்தில் சிறந்தவர்களா? மருத்துவத்தில், தற்போதுவிட பல நுணுக்கங்களை கற்றறிந்தவர்களா? அப்படியானால், தலைவலியாலும், வயிற்று வலியாலும் சில நூறு ஆண்டுகளுக்கு வைத்திய வசதி இல்லாமல் இறந்துபோனதாக செய்திகள் கூறுகின்றனவே அப்படியானால், இந்த மருத்துவ நுணுக்கங்கள் அப்போது மட்டும் காணாமல் போயிருந்தது எப்படி என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலைத்தான் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆச்சர்யங்கள் விரியும்.

அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?

 

அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது.

பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு ஹாஃப் பாயில் முட்டையை உட்கொள்ளுதலே
நன்மையை அளிக்கும்.

அதற்கு காரணம் அதிலுள்ள
ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம். அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை.
Continue reading

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?FB_IMG_1451969164714

ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால்,

தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.

2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.

3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.

மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறிக!

Continue reading

எளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி?:

passport-350x250தாய் நாட்டைக் கடந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைவரும் பாஸ்போர்ட் பெறுவது அவசியம். பாஸ்போர்ட்களில் நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

குடிமக்கள் அனைவருக்கும் சாதாரண பாஸ்போர்ட் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் வழங்கப்படும். பிரதமர், முதல்வர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கு டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட் வழங்கப்படும். வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு ஜம்போ பாஸ்போர்ட் வழங்கப்படுகின்றன. Continue reading

மொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்

gallerye_010424168_1189811தமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், ‘ரியல் எஸ்டேட்’காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன். Continue reading